ETV Bharat / crime

கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்திக்கொண்ட காவலர் உயிரிழப்பு!

கரோனா தொற்று தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட ஊர்க்காவல்படை காவலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

author img

By

Published : Jul 24, 2021, 7:17 AM IST

police death
காவலர் உயிரிழப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல் (47). ஊர்க்காவலர் படையில் காவலராக இருந்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் தங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 22) காலை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காவலர் கோகுல், கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 23) அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த உறவினர்கள் கோகுலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் கிடைத்த ஒளி - பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா!

சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல் (47). ஊர்க்காவலர் படையில் காவலராக இருந்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் தங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 22) காலை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காவலர் கோகுல், கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 23) அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த உறவினர்கள் கோகுலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் கிடைத்த ஒளி - பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.